தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (தொகுதி 2) தேர்வு நடைபெறுவதை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் .ஆர்.சரவணக்குமார், , நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, ஆகியோர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி – 2 (Group- II) போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

Update: 2024-09-14 16:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், ஆண்டகளூர் கேட், திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி, மசக்காளிப்பட்டி எஸ்.ஆர்.வி ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி, நாமக்கல் சி.எம்.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பொரசப்பாளையம் ஸ்ரீ விநாயகா மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்.ஆர்.சரவணக்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி – 2 (Group- II) போட்டித்தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். தொடர்ந்து, தேர்வு மையத்தில் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுதி வருவதை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் , தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஆர்.சரவணக்குமார், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 2 (Group- II) போட்டித்தேர்வு இன்று காலை 9.30 க்கு தொடங்கி 12.45 மணி வரை நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 22,277 தேர்வர்கள் போட்டி தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தார்கள். நாமக்கல் வட்டத்தில் 35 தேர்வு கூடங்களில் 10,742 தேர்வர்களுக்கும், இராசிபுரம் வட்டத்தில் 20 தேர்வு கூடங்களில் 6,093 தேர்வர்களுக்கும் மற்றும் திருச்செங்கோடு வட்டத்தில் 18 தேர்வு கூடங்களில் 5,442 தேர்வர்களுக்கும் என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 73 தேர்வு மையங்களில், 22,277 தேர்வர்கள் போட்டி தேர்வு எழுத தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு பணிகளில் 73 முதன்மை கண்காணிப்பாளர்கள், 3 கண்காணிப்பு குழுக்கள், 7 பறக்கும் படைகள், 21 நடமாடும் குழுக்கள், 73 ஆய்வு அலுவலர்கள் மற்றும் 73 ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி - 2 (Group- II) போட்டித்தேர்வினை 17,283 தேர்வர்கள் எழுதி உள்ளார்கள். 4,994 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.

Similar News