கரூரில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

கரூரில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரரை 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

Update: 2024-09-19 01:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை வாங்கல் காவல்துறையினர் 2 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கரூர் மாவட்டம் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் மகள் ஷோபனா என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீஸார் கடந்த செப்டம்பர் 2ல் கரூரில் கைது செய்து, கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிபிசிஐடி காவலில் விசாரிக்க செப்டம்பர் 5 ல் கரூர் நீதிமன்றத்தில் சேகர் ஆஜர்படுத்தப்பட்டார். 2 நாள் நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து அவரை விசாரித்து செப்டம்பர் 7ல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சேகரை கரூர் குற்றவியல் நடுநர் நீதிமன்றம் 1-ல் செப்டம்பர் 11 அன்று காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். சேகரை செப்டம்பர் 25 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் சேகர் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து வாங்கல் காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக நேற்று செப்டம்பர் 18 மாலை திருச்சி மத்திய சிறையில் இருந்து சேகரை அழைத்து வந்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தினர். வாங்கல் காவல்துறையினர் விசாரணைக்கு 10 நாள் அனுமதி கேட்ட நிலையில், நீதிமன்றம் 2 நாள் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து வாங்கல் காவல்துறையினர் அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Similar News