ராசிபுரத்தில் குல்பிஐஸ் தயார் செய்து வந்த வீட்டில் தீ ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்..

ராசிபுரத்தில் குல்பிஐஸ் தயார் செய்து வந்த வீட்டில் தீ ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்..

Update: 2024-09-27 15:15 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எம்எல்ஏ., அலுவலகம் பின்புறம், வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில், ராஜஸ்தான் மாநிலம் சித்தோடு பகுதியைச் சாஹர்மல் என்பவர் ஆட்களை வைத்து குல்பிஐஸ் தயாரித்து வந்தார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், வீட்டில் இருந்து நெருப்புடன் கூடிய புகை வந்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குல்பிஐஸ் தயார் செய்யும் பொருட்கள், பிரிட்ஜ், ஏர்கூலர் உள்ளிட்ட 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது. மேலும், 100,200, 500 என சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்த ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News