கொலை குற்றவாளி தப்பிக்க முயற்சிக்கும் போது கால் உடைந்தது

திண்டுக்கல் அருகே வாலிபர் வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் போது கால் உடைந்தது

Update: 2024-09-27 15:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் பெரியகோட்டை காப்பிளியப்பட்டியை சேர்ந்த ஹேமதயாளவர்மன் (32) என்பவர் நேற்று முன்தினம் காப்பிளியபட்டி டாஸ்மாக் பின்புறம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளி பகவதி வேலாயுதம்பாளையம் கணவாய்மேடு பாறை பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர் போலீசாரை கண்டதும் பகவதி தப்பி ஓட பாறையில் இருந்து கீழே குதித்த போது கால் உடைந்தது போலீசார் மனிதாபிமான அடிப்படையில் பகவதியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். மேலும் இதுகுறித்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News