ரேஷன் அரிசி பறிமுதல்: 2 பேர் கைது!

குற்றச் செய்திகள்

Update: 2024-10-01 03:40 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருமயம்: புதுகை மாவட்ட குடிமைபொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்இன்ஸ்பெக்டர் கார்த்தி தலைமையிலான போலீசார் புதுக்கோட்டை காரைக்குடி புறவழிச்சாலையில் திருமயம் பெல் நிறுவனம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது, 50 கிலோ எடை கொண்ட 21 சாக்கு மூட்டைகளில் சுமார் ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. விசாரணையில், வாகனத்தில் வந்தவர்கள் மதுரை காமராஜபுரத்தை சேர்ந்த பிரபு (27), கீரைத்து றையை சேர்ந்த பாண்டி (27) என்பதும், வில்லாபுரம், ஜெயந்திபுரம் ஆகிய பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் வெளிச்சந்தையில் கூடுதல்விலைக்கு விற்க கொண்டு சென்றதாக தெரிவித்தனர். 2 பேரையும் கைது செய்த போலீசார் அரிசியுடன் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Similar News