கண்டெயினர் லாரி மோதி விபத்து, 2 வாலிபர்கள் பலி

கோபால்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெயினர் லாரி மோதி விபத்து, 2 வாலிபர்கள் பலி, ஒருவர் படுகாயம்

Update: 2024-10-06 08:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டியை அடுத்த கணவாய்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணி அளவில் நெடுஞ்சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மீது கண்டெயினர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள், ஒருவர் படுகாயம் அடைந்து நத்தத்தை சேர்ந்த தினகரனை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் மேற்படி சம்பவம் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News