ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி 2 ஆவது வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;

Update: 2025-07-26 00:29 GMT
அரியலூர்,ஜூலை 26- ஆடி 2 ஆம் வெள்ளிக்கிழமையொட்டி அரியலூர் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழா மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. ஆடி 2 ஆம் வாரம் வெள்ளியையொட்டி, அரியலூர் மேலத்தெருவிலுள்ள பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின்னர் ரோஜா, மல்லிகை, சம்பங்கி,தாமரை,தாழம்பூ, முல்லைப்பூ, அரளி, செவ்வந்தி, மரிக்கொழுந்து உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.பால்குடம், தீமிதி திருவிழா...அரியலூர் அடுத்த கொல்லாப்புரம், படைநிலை, உள்ளிட்ட கிராமங்களிலுள்ள மாரியம்மன் கோயில்களில் பால்குடத் திருவிழாவும், கூவாத்தூர் கிôமத்திலுள்ள ரௌபதியம்மன் கோயிலில் தீமித் திருவிழாவும் நடைபெற்றது. படவிளக்கம்: ஆடி 2 ஆவது வாரா வெள்ளியைக்கிழமையையொட்டி, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அரியலூர் மேலத்தெருவிலுல்ள பெரியநாயகி அம்மன்.

Similar News