வாலிபருக்கு பீர் பாட்டில் உடைத்து மார்பில் குத்து 2பேர் கைது

திண்டுக்கல் அருகே குட்டத்துஆவாரம்பட்டியில் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபருக்கு பீர் பாட்டில் உடைத்து மார்பில் குத்து - 2 பேர் கைது;

Update: 2025-09-17 07:07 GMT
திண்டுக்கல், குட்டத்துஆவாரம்பட்டி, டாஸ்மாக் அருகே மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறு காரணமாக குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த டோம்னிக் ஸ்டீபன்(29) என்பவரை அணைப்பட்டியை சேர்ந்த ஈஸ்வர பாண்டியன், மாசிலாமணி, ஜெயராமன் ஆகிய 3 பேரும் டோம்னிக் ஸ்டீபனை பீர் பாட்டிலை உடைத்து மார்பு,முதுகு என்று சரமாரியாக குத்தினர் மேலும் கைகளால் தாக்கினர். காயம் அடைந்த டோம்னிக்ஸ்டீபன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் அங்கமுத்து மற்றும் காவலர்கள் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட ஈஸ்வர பாண்டியன், மாசிலாமணி ஆகிய 2 பேரை கைது செய்து மேலும் ஜெயராமனை தேடி வருகின்றனர்.

Similar News