வெறி நாய் கடித்து 20 ஆடுகள் பரிதாப பலி

மதுராந்தகம் அருகே வெறி நாய் கடித்து 20 ஆடுகள் பரிதாப பலி

Update: 2024-03-06 15:16 GMT
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நெல்லி கிராமத்தை சேர்ந்தவர்கள் எத்திராஜ் ,ராஜ் ஆகிய இருவருக்கும் குல தொழில் மற்றும் குடும்ப வாழ்வாதாரம் எல்லா ஆடு வளர்ப்பாகும். இதில் எத்திராஜ்க்கு சொந்தமாக 50 ஆடுகளும், ராஜிக்கு 40 என மொத்தம் 90 செம்மறி ஆடுகள் உள்ளன. இவர்கள் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு சென்று விட்டு தங்கள் கிராமத்தில் உள்ள குளக்கரை மேலே அமைந்துள்ள ஆட்டுப்பட்டியில் ஆடுகளை அடைத்துள்ளனர். நேற்று இரவு பட்டிக்குள் புகுந்த இரு வெறிநாய் கூட்டம் ஆட்டு பட்டியில் இருந்த 20 ஆடுகளை கடித்துக் கொதறி கொன்று விட்ட மேலும் 24 ஆடுகள் கடிபட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் 2. 50 லட்சம் மதிப்புடையதாகும். தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வாழும் இவர்களுக்கு அரசாங்கம் உரிய நிதி உதவி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர்.
Tags:    

Similar News