ராமநாதபுரம் அரசுப் பேருந்து விபத்து 20 மேற்பட்டோர் காயம்
பரமக்குடி அருகே டிப்பர் லாரி மீது மோதிய அரசு பேருந்து டிரைவர் உட்பட 20 கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இருந்து பார்த்திபனூர் வழியாக வீரசோழனுக்கு சென்ற நகரப் பேருந்து கமுதக்குடி அருகே சென்று கொண்டிருந்த பொழுது முன்னாள் சென்ற டிப்பர் லாரியின் பின்புறத்தில் அதிக வேகமாக மோதியது. இதில் பேருந்து முன் பகுதி முற்றிலும் சேதமடைந்து ஓட்டுநர் உட்பட 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தவர்களை மீட்டு பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பரமக்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.