அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாமில் 21 பேர் மனு

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர தலைமையில் வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம் ‌21 பேர் மனு அளித்தனர்;

Update: 2025-06-18 13:36 GMT
அரியலூர் ஜூன்.19- அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.‌ அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 21 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் இடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர், உடனடியாக உரிய மேல் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்கள்.

Similar News