அரியலூரில் 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்த ஆட்சியர்
அரியலூரில் 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதை உறுதி செய்த ஆட்சியர்;
அரியலூர்,ஜூன் 12- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர வைப்பறையில் உள்ள 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியர் பொ.ரத்தினசாமி காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். வைப்பறையில் 747 பேலட் இயந்திரங்கள், 787 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 786 விவிபாட் இயந்திரங்கள் என 2,320 வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்து உறுதி செய்தார். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு காவல் துறை பாதுகாப்புடன் 24 மணிநேரமும் கண்காணிக்கப்படுவதை ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், கோட்டாட்சியர் கோவிந்தராஜ், தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உடனிருந்தனர். படவிளக்கம்:அரியலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி.