ஜேசிபி வாகனத்தில் சிக்கி வயிற்றில் 25 முட்டைகளுடன் உயிரிழந்த பெண் பாம்பு

இறந்த சோகத்தில் சில நிமிடங்களில் உயிரிழந்த ஆண் நல்ல பாம்பு*

Update: 2024-07-25 15:42 GMT
மதுரை கல்மேடு பகுதியில் ஜேசிபி வாகனத்தில் சிக்கி வயிற்றில் 25 முட்டைகளுடன் உயிரிழந்த பெண் பாம்பு இறந்த சோகத்தில் சில நிமிடங்களில் உயிரிழந்த ஆண் நல்ல பாம்பு மதுரை கல்மேடு பகுதியில் காலியிடத்தை சுத்தம் செய்யும் போது திடீரென கல் இடுக்கில் இருந்த வெளியே வந்த இரண்டு நல்ல பாம்புகள் ஜேசிபி வாகனத்தில் சிக்கி எதிர்பாராத விதமாக உயிரிழந்து விட்டன அதனைத் தொடர்ந்து பாம்பு பிடி வீரர் சினேக் சகா அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சினேக் சகா அவர்கள் அந்த இரண்டு நல்ல பாம்புகளையும் உயிருடன் மீட்க போராடியுள்ளார் அப்போது பெண் பாம்பு எதிர்பாராத விதமாக இறந்து விட்டது இறந்த பெண் பாம்பின் வயிற்றில் 25 முட்டைகள் இருந்ததாக பாம்பு பிடி வீரர் சினேக் சகா அவர்கள் தெரிவித்தார் அதனைத் தொடர்ந்து பெண் நல்ல பாம்பு இறந்த சோகத்தில் அடுத்த சில நிமிடங்களில் ஆண் நல்ல பாம்பும் இறந்துவிட்டது

Similar News