அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 25 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிரடி சோதனை குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபர்கள் கைது தனிப்படைக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு;
அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 25 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் மங்களமேடு காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட வாலிகண்டபுரம் கிராமத்தில் 1.சங்கர்(47) த/பெ ராமதாஸ், 2.வெற்றிவேல் (24), த/பெ சுப்ரமணி இருவரும் வாலிகண்டபுரம் கிராமம், வேப்பந்தட்டை வட்டம், பெரம்பலூர் மாவட்டம். ஆகியோர்கள் மேற்படி கிராமத்தில் ஒரு மெத்தை வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் உதவி ஆய்வாளர் குப்புசாமி மற்றும் அவரது குழுவினர் மேற்படி எதிரிகளில் சங்கர் என்பவர் தலைமறைவாகி விட வெற்றிவேல் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 1.ஹான்ஸ் ( 75 பண்டல் - எடை 22.5 -கிலோ), 2.விமல் பாக்கு ( 17 பண்டல் எடை 816-கிராம்) மற்றும் 3. A1-பான் மசாலா (17 பண்டல் எடை 810-கிராம்) 4. கூல் லீப் ( 17 பண்டல் எடை 1.713 கிலோ கிராம்) என மொத்தம் - 25.839 கிலோ கிராம் 19,210 ரூபாய் மதிப்புள்ள* குட்கா பொருட்களை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். .