புதுக்கோட்டை: புதுகை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்புபுதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்ரல் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 25ம் தேதி (வெள் ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. இதில், கலெக்டர் தலைமையில் வேளாண்மை துறை உட் பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக் கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, மாவட் டத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பயிர்சாகுபடிக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட் கள் இருப்பு விவரம், வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வதுடன் விவசாயம் தொடர் புடைய கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.