சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பஸ்கள்

வார இறுதிநாட்களை முன்னிட்டு;

Update: 2025-03-21 14:01 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வார இறுதி நாட்களை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சார்பில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 24-ந் தேதி வரை 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதாவது சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூர் மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சீபுரம், பெங்களூரு, ஓசூர், திருவண்ணாமலைக்கும், பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஓசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூர், திருச்சி, மதுரைக்கும், கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் ஜோசப் டயஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News