கரூர் மாவட்டத்தில் 264.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

கரூர் மாவட்டத்தில் 264.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

Update: 2024-10-05 04:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டத்தில் 264.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. தமிழக உள் பகுதிகளில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவிப்பு செய்தது. இதன் அடிப்படையில் நேற்று கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது மழை பெய்தது. மழை பெய்த நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாவட்டத்தில் கரூரில் 28.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதேபோல அரவக்குறிச்சியில் 18.20-மில்லி மீட்டர், அணைப்பாளையம் 13.60 மில்லி மீட்டர், க. பரமத்தியில் 41.20 மில்லி மீட்டர், குளித்தலையில் 13.20 மில்லி மீட்டர், தோகைமலையில் 17.60 மில்லி மீட்டர் கிருஷ்ணா ராயபுரத்தில் 6 மில்லி மீட்டர், மாயனூரில் 6-மில்லிமீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சபட்டியில் 46.80 மில்லி மீட்டர், கடவூரில் 38.40 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 9 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 26 மில்லி மீட்டர் என மொத்தம் 264.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 22.05-மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Similar News