தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் - எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை 

தீரன் சின்னமலையின் 270வது பிறந்தநாள் முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று மரியாதை செலுத்தினார்.;

Update: 2025-04-17 17:42 GMT
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 270-ஆவது பிறந்த நாளான இன்று (17.4.2025 – வியாழக் கிழமை), சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள தீரன் சின்னமலை திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு, தீரன் சின்னமலை திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தலைமைக் கழகச் செயலாளர்கள் மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

Similar News