கோவில்பட்டியில் 3 பேரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண்மணி கைது!

கோவில்பட்டியில் 3 பேரிடம் பிக்பாக்கெட் அடித்த பெண்மணி கைது – காவல்துறையிடம் பிடித்த கொடுத்த பொது மக்கள் - 18 ஆயிர ரூபாய் பணம் பறிமுதல்

Update: 2024-09-09 09:18 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டிக்கு சாத்தூரைச் சேர்ந்த கனகராஜ் என்பரவது மனைவி அங்கம்மாள் அரசு பேருந்தில் வந்துள்ளார். கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்தில் இறங்கி தூத்துக்குடி செல்வதற்காக மற்றொரு அரசு பேருந்தில் அமர்ந்து டிக்கெட் எடுக்க முயன்ற போது தனது கைபையில் இருந்த மணி பார்சினை பார்த்த அது காணமால் போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.சாத்தூரில் இருந்து கோவில்பட்டிக்கு அரசு பேருந்தில் வந்த போது அருகில் இருந்த பெண்ணின் மீது சந்தேகப்பட்ட அங்கம்மாள் அந்த பெண்ணை தேடி பார்த்துள்ளார். அப்போது சாத்தூர் பேருந்து செல்லும் இடத்தில் அந்த பெண் நிற்பதை பார்த்துதம் அங்கம்மாள், அவரே நோக்கி சென்றுள்ளார். இவரை பார்த்த அந்த பெண் தப்பித்து ஓட முயன்றுள்ளார். இதை பார்த்த அங்கம்மாள் கூச்சலிட அருகில் இருந்தவர்கள் தப்பியோட முயன்ற பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து அண்ணா பஸ் நிலையத்தில் இருந்த புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது, அந்த பெண் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த விக்ரமன் என்பவரது மனைவி மீனாட்சி என்பது தெரியவந்தது.அங்கம்மாள் உள்ளிட்ட 3 பேரிடம் மணிபர்சினை மீனாட்சி திருடியது தெரியவந்தது. இதையெடுத்து மீனாட்சியை கைது செய்த போலீசார் அவர் திருடி வைத்திருந்த 18 ஆயிர ரூபாய் பணத்தினையும் பறிமுதல் செய்தனர்.

Similar News