பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

Update: 2024-08-24 16:40 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள சந்திரசேகரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரகுநாதன் தலைமையேற்று நடத்தினார். புதிய பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பள்ளி மேலாண்மை குழுவின் தலைவராக கீதா தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரவி, பஞ்சாயத்து தலைவர் பழனிவேல், பஞ்சாயத்து துணைத்தலைவர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். பெற்றோர்களும் எஸ்.எம். சி, பி.டி.ஏ உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பார்வையாளராக ராஜசேகரன் ராசிபுரம் வட்டார வளமையா மேற்பார்வையாளர் கலந்து கொண்டார்.

Similar News