கண்டாச்சிபுரம் அருகே 4 பசுமாடுகள் மர்ம்மான முறையில் இறப்பு

4 பசுமாடுகள் மர்ம்மான முறையில் இறப்பு;

Update: 2025-03-24 03:41 GMT
கண்டாச்சிபுரம் அடுத்த காரணை ஊராட்சியைச் சேர்ந்தவர் அருணகிரி, 42; விவசாயி. 4 கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் கட்டப்பட்டிருந்த 4 சினை மாடுகளுக்கும் தண்ணீர் வைத்துவிட்டு சென்றவர், காலையில் வந்து பார்த்தபோது, 4 மாடுகளும் இறந்து கிடந்தன.தகவலறிந்த வி.ஏ.ஓ., அன்புவிழி மற்றும் ஆயந்துார் கால்நடை மருத்துவர் ரவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின், இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.திடீரென 4 மாடுகள் மர்மமான முறையில் இறந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News