போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை
சாணார்பட்டியில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம்;
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்து 2024-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் புளியம்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ்(26) என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் இன்று நீதிபதி அவர்கள், மோகன்ராஜ்க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.