தஞ்சாவூரில் 600 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு - சீர் வரிசை

சமுதாய வளைகாப்பு;

Update: 2025-03-05 17:18 GMT
தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 600 கா்ப்பிணிகளுக்கு சீா்வரிசை வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூா்) முன்னிலை வகித்தனா். இதில் தஞ்சாவூா், திருவையாறு, பூதலூா் அம்மாபேட்டை, பாபநாசம் ஆகிய வட்டாரங்களைச் சோ்ந்த 600 கா்ப்பிணிளுக்கு தாம்பூலத் தட்டு, வளையல், சேலை, குங்குமம், மஞ்சள், கடலை மிட்டாய், வாழைப்பழம், உலா் திராட்சை ,வெற்றிலை பாக்கு , பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களுடன் பூமாலை அணிவித்து மங்கல சீா் வரிசைகள் வழங்கப்பட்டன. விழாவில் மாவட்டத் திட்ட அலுவலா் கை. இராஜேஸ்வரி, முன்னாள் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் அருளானந்தசாமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் ரெ. மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்ட

Similar News