அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 61 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது

1.ஹான்ஸ் 98 பண்டல் (29.5 கிலோ), 2.கூல்லீப் 180 பண்டல் ( 18 கிலோ), 3.விமல் பாக்கு 147 பண்டல் ( 11 கிலோ), மற்றும் 4.A1 பான் மசாலா 250 பண்டல் ( 2.5 கிலோ), என மொத்தம் – 61 கிலோ கிராம் எடையுள்ள சுமார் 1,39,800/-ரூபாய் உடைய குட்கா பொருட்களை பறிமுதல்;

Update: 2025-04-23 12:39 GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 61 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து. பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள். அதன்படி இன்று 23.04.2025 பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் பெரம்பலூர் உட்கோட்டம் பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஷேக் அப்துல்லா (50/25) த/பெ ஜெய்லானி, மேட்டு தெரு, வடக்கு மாதேவி ரோடு, பெரம்பலூர் என்பவர் தமக்கு சொந்தமான பெட்டி கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்த நிலையில் தனிப்படையினர் மற்றும் அவரது குழுவினர் மேற்படி எதிரியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 1.ஹான்ஸ் 98 பண்டல் (29.5 கிலோ), 2.கூல்லீப் 180 பண்டல் ( 18 கிலோ), 3.விமல் பாக்கு 147 பண்டல் ( 11 கிலோ), மற்றும் 4.A1 பான் மசாலா 250 பண்டல் ( 2.5 கிலோ), என மொத்தம் – 61 கிலோ கிராம் எடையுள்ள சுமார் 1,39,800/-ரூபாய் உடைய குட்கா பொருட்களை பறிமுதல் செய்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News