இரு தரப்பினர் இடையே மோதல் - 7 பேர் மீது வழக்கு பதிவு

திருப்பாச்சேத்தி அருகே இரு தரப்பினரிடையே மோதல் நடைபெற்ற நிலையில் 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2024-05-13 14:46 GMT

மோதல்

திருப்பாச்சேத்தி அருகே பச்சேரியில் வைகாசி விசாக திருவிழா நடத்துவது தொடர்பாக கிராம ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஒலி பெருக்கி அமைப்பது சம்பந்தமாக இரு தரப்பினர் மோதிக்கொண்டனர்.

இது குறித்து அழகர் புகாரின் படி ரமேஷ், ஊர்க்காவலன், அய்யனார், சசிகுமார் ஆகிய 4 பேர் மீதும், ரமேஷ் புகாரின்படி அழகர், சந்திரன், கொங்கேஸ்வரன் ஆகிய 3 பேர் என 7 பேர் மீது திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

Similar News