பருத்தி ரூபாய் 7 ஆயிரத்துக்கு மேல் விற்பனை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்;

Update: 2025-07-11 05:38 GMT
அம்மாபேட்டை அடுத்துள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது மாசி பட்ட பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு சேலம் மாவட்டம் மேட்டூர், தேவூர், கொங்கணாபுரம்,கொளத்தூர் மற்றும் அந்தியூர், பவானி, அம்மாபேட்டை சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் பருத்திகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.மொத்தம் 2ஆயிரத்து 924 பருத்தி மூட்டைகள் கொண்டுவரப்பட்டன ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் பிரவீன்ஆனந்த் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது.இதில் பிடி ரக பருத்தி குவின்டால் குறைந்தபட்சமாக ரூ.7ஆயிரத்து 109 க்கும்அதிகபட்சமாக ரூ.7ஆயிரத்து 632 க்கும் ஏலம் போனது.இதனை கோவை, அன்னூர், புளியம்பட்டி, சேலம்,கொங்கணாபுரம்,பெருந்துறை, அந்தியூர் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து போட்டிபோட்டு ஏலத்தில் எடுத்து சென்றனர். மொத்தம் ரூ. 75 இலட்சத்து 88 ஆயிரத்து 186 க்கு விற்பனையானது.

Similar News