கபிலர்மலை பாலசுப்ரமணி கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 7 லட்சத்து 68 ஆயிரம்.

கபிலர்மலை பாலசுப்ரமணி கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 7 லட்சத்து 68 ஆயிரம் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது.;

Update: 2025-11-01 14:17 GMT
பரமத்தி வேலூர், நவ.1: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை பாலசுப்ரமணியசாமி கோவில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை நாமக்கல் மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சுவாமிதான் தலைமையில் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் அடோபர் மாதம் வரை ரூ.7 லட்சத்தி 68 ஆயிரத்து 825 உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது. இந்நிகழ்வில்  ஆய்வாளர் ஜனனி, செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், திருக் கோவில் பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News