கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் தேமுதிக நகர, ஒன்றியம், சார்பாக அல்லம்பட்டியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் தேமுதிக நகர, ஒன்றியம், சார்பாக அல்லம்பட்டியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

Update: 2024-08-25 14:41 GMT
விருதுநகரில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் தேமுதிக நகர, ஒன்றியம், சார்பாக அல்லம்பட்டியில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் பத்மபூஷன் விருது பெற்ற கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகர் நகரம், ஒன்றிய, தேமுதிக சார்பில் அல்லம்பட்டியில் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திருவுருவப்படத்திற்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் டி. புவனேஸ்வரி, விருதுநகர் மேற்கு ஓன்றிய செயலாளர் பி. ராஜு, விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.சேகர், விருதுநகர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பட்ட முத்து, விருதுநகர் வடக்கு ஒன்றிய பொருளாளர் வெற்றிவேல், விருதுநகர் நகர துணை செயலாளர் C.பரத், விருதுநகர் நகர மாவட்ட பிரதிநிதி K.பால்பாண்டி Ex நகர அவை தலைவர் பில்டிங் முருகேசன், Ex நகர செயலாளர் விநாயகம், Ex ஒன்றிய மாவட்ட பிரதிநிதி வைரமணி, 31 வது வார்டு செயலாளர் செபஸ்தியான், முனியசாமி, முனியராஜ், காசி, ரஞ்சித், ரஞ்சித் ராமராஜன், செல்வ பெருமாள், தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News