வலையங்குளம் கொலை வழக்கில் 8 பேர் கைது
மதுரை அருகே நடந்த படுகொலை வழக்கில் தொடர்புடைய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை அருகே வலையங்குளத்தில் சில நாட்களுக்கு முன் டிரம்ஸ் அடிக்கும் தொழிலாளியான அஜய் வேலை முடிந்து திரும்பும் போது மர்ம நபர்கள் தாக்கியதில் உயிரிழந்தார் . இது தொடர்பாக குசவன்குண்டு சகோதரர்கள் கார்த்திக் (26), பாண்டி முருகன் (22) இந்திரஜித் (28), மற்றும் முத்துப்பாண்டி (24) ஹரி ராகவன்( 22), பிரவீன் குமார்( 20), விஷ்ணு (22) உள்ளிட்ட எட்டு பேரை பெருங்குடி போலீசார் நேற்று (செப் .1) கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள பாண்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.