கோவை CBM கலைக் கல்லூரியில் பேராசிரியர் இல்லை: மாணவர்கள் அதிருப்தி!

அரசு உதவி பெறும் கலைக் கல்லூரியில் கணித பிரிவில் பேராசிரியர்கள் இல்லை என்று மாணவர்கள் ஆட்சியரிடம் புகார்.;

Update: 2025-07-15 11:27 GMT
கோவை CBM கலைக் கல்லூரியில் கணிதப் பிரிவில் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால் வகுப்புகள் நடைபெறவில்லை என்று மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பி.எச்.டி மாணவர்கள் வகுப்பு எடுத்தாலும், அதுவும் சரியாக நடைபெறவில்லை. நிர்வாகம் போராட்டத்தை தடுக்க டி.சி கொடுப்பதாக கூறி மாணவர்களை பயமுறுத்தியதாகவும், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மாணவர்கள் கூறினர். B.Com பிரிவில் Self-Finance மூலம் சேர்க்கை நடைபெறுவது, Hall Ticket Fees, Blind Fees எனக் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Similar News