ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் 1 லட்சம் தீபம் ஏற்றும் நிகழ்வு

Update: 2023-11-27 05:54 GMT

தீபமேற்றும் நிகழ்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ரெங்கநாதபுரம் ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவிலில் ஒரு லட்சம் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. திண்டுக்கல் ரெங்கநாதபுரம் ஜி டி என் கல்லூரி அருகே உள்ள ரங்கமலையில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் கார்த்திகையான நேற்று ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டது. இன்றும் பக்தர்கள் மூலம் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்கே ஆபரண தங்கம் மற்றும் ஆடை நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து தீபம் ஏற்றுமாறு நிர்வாக அறங்காவலர்கள் அழைத்துள்ளனர்.

Tags:    

Similar News