உளுந்தூர்பேட்டையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

உளுந்தூர்பேட்டை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-24 08:01 GMT

பைல் படம் 

உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் பறக்கும் படை ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நேற்று மாலை எலவனாசூர்கோட்டை- திருக்கோவிலூர் சாலையில் புகைப்பட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது நெடுமானுாரை சேர்ந்த வீராசாமி, ஆவணங்களின்றிஎடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சக்திவேலிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News