பவானி அருகே 100 பண்டல் சேலைகள் பறிமுதல்

பவானி அருகே 100 பண்டல் சேலைகள் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

Update: 2024-03-26 14:27 GMT

பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காளிங்கராயன்பாளையத்தில் தனியார் கட்டிடத்தில் சேலைகள் பண்டல் பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு புகார்கள் வந்தன.

புகாரின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சேலைகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து அவரிடம் நடைபெற்ற விசாரணையில் ஈரோட்டைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் இருப்பு வைக்க சொல்லி அவற்றை கொடுத்ததாக கூறியதன் அடிப்படையில் ,

இதுகுறித்து வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

Tags:    

Similar News