பாலமுருகன் கோவிலில் 1,008 திருவிளக்கு பூஜை!

ரத்தனகிரி பாலமுருகன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-04-24 07:23 GMT

திருவிளக்கு பூஜை 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள விஜயதுர்க்கை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், விக்னேஸ்வர பூஜை, துர்க்கை, லட்சுமி சரஸ்வதி ஹோமம், சங்கல்பம் நடந்தது. தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகன் அடிமை சுவாமிகள் முன்னிலையில் பூஜை, தீபாராதனை நடைபெற்றது. இதில் செயல் அலுவலர் சங்கர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News