ரூ.1.06 கோடி நிதியளித்த திமுக மகளிரணி.
மதுரையில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் மகளிரணி சார்பில் ரூபாய் ஒரு கோடியே 6 லட்சம் நிதி வழங்கப்பட்டது;
மதுரையில், உத்தங்குடி கலைஞர் திடலில் திமுக பொதுக்குழு கூட்டம் நேற்று (01/06/2025) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் 27 வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்பொதுக்குழுவில் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த "மண் -– மொழி –மானம் காத்திட ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் சிறப்புத் தீர்மானம் உட்பட கழக புதிய உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்’’ எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், திமுக மகளிர் அணி உறுப்பினர் சேர்க்கை முயற்சியின் மூலம் கட்சிக்காக நிதி திரட்டப்பட்டது. இதில் 1 கோடி 6 லட்சம் ரூபாய் திரட்டி, அந்த நிதி பொதுக்கூட்டத்தில் கட்சிக்கு வழங்கப்பட்டது. திமுக இளைஞரணி வழங்கிய நிதியைவிட மகளிரணி வழங்கிய நிதி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.