முத்துமலை முருகன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 2ம்ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.

Update: 2024-03-23 08:03 GMT

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோவிலில் 2ம்ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது.  

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள 146 அடி உயரமுள்ள முத்து மழை முருகன் கோவிலில் இரண்டாம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நிகழ்ச்சி கடந்த 22 ஆம் தேதி தொடங்கி காப்பு கட்டுதல், கணபதி ஹோமம், கொடியோற்றத்துடன் தொடங்கிய நிலையில் இன்று முத்துமலை முருகன் கோவிலில் யாக பூஜை செய்து 108 சங்காபிஷேகம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது பின்னர் முத்துமலை முருகனுக்கு 108 சங்காபிஷேக செய்து பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மகா தீபாரணை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News