காட்டுப்பன்றி வேட்டையாடிய 11 பேருக்கு அபராதம்

Update: 2023-11-20 08:53 GMT

காட்டுப்பன்றி வேட்டையாடியவர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல்லில் காட்டுப்பன்றி வேட்டையாடிய 11 பேருக்கு வனத்துறையினர் ரூ.5.6 லட்சம் அபராதம் விதித்தனர்.திண்டுக்கல் - சிறுமலை ரோட்டில் உள்ள சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு உதவி வனப் பாதுகாவலர் சீனிவாசன் தலைமையில் வாகன தணிக்கை நடந்தது.

சிறுமலையிலிருந்து திண்டுக்கல் நோக்கி வந்த டூவீலர்களில் சோதனை செய்தனர். அப்போது சிறுமலை பழையூரில் உள்ள தோட்டத்தில் மேற்பார்வையாளராக பணிபுரியும் திருச்சி துறையூரைச் சேர்ந்த பெருமாள் 65, திண்டுக்கல் காந்திகிராமத்தைச் சேர்ந்த ஜோதிபிரகாஷ் 32 ஆகியோர் வந்தனர். அவர்கள் கொண்டு வந்த உணவு பாத்திரங்களை ஆய்வு செய்தபோது அதில் சமையல் செய்யப்பட்ட காட்டுப் பன்றி இறைச்சி இருந்தது. சிறுமலை வனச்சரகர் தலைமையில் விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News