சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் கைது

காரிமங்கலம் அருகே திண்டலில் உள்ள மாந்தோப்பில் சூதாடிய 12 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-03 05:47 GMT

காவல் நிலையம் 

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் காவல் நிலையத்திற்கு திண்டல் கிராமத்தில் சூதாடுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து காரிமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் ஜவகர் குமார் மற்றும் காவலர்கள் திங்கள் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்குள்ள மாந்தோப்பில் சூதாடுவதாக தகவல் அறிந்து அங்கு சென்று விசாரணை செய்ததில் மாந்தோப்பில் 12 நபர்கள் சூதாடியது தெரியவந்தது .

மேலும் அவர்கள் 12 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து காவல்துறையினர் 7,580 ரூபாய் பணம் 10 செல்போன்கள் மற்றும் ஒன்பது இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News