1.20 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணி!
அரசு ஆரம்ப சுகாதார நிலையையே கட்டுமானப் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-06-15 05:57 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த காவனூர் ஊராட்சியில் ரூபாய் 1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் வளர்மதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, வட்டாட்சியர் சுரேஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.