மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டு சிறை

தொப்பூர் அருகே பிளஸ் டூ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை என தர்மபுரி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

Update: 2024-04-23 03:20 GMT

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் கூலி தொழிலாளியை இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிளஸ் டூ மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இது குறித்து வெளியே சொல்லக்கூடாது என மாணவி மிரட்டி உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பேரில் தொப்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

காவல்துறை போக்சோ கிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக் வந்தது. வழக்கு விசாரணை முடிவில் மாரியப்பன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. அடுத்து மாரியப்பனுக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 35,000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ நீதிமன்ற நீதிபதி சையத் பரக்கத்துல்லா நேற்று தீர்ப்பளித்துள்ளார்.

Tags:    

Similar News