1500 மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கிழி வழங்கிய உதயநிதி

சிவகங்கையில் 1500 மூத்த திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி பொற்கிழிகளை வழங்கினார்.

Update: 2024-02-18 05:01 GMT

பொற்கிழி வழங்கல் 

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துார் அருகே வைரவன்பட்டியில் சிவகங்கை மாவட்ட 4 சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த 1500 மூத்த நிர்வாகிகளுக்கு தங்க முலாம் பூசிய மெடல், நிதி உதவி, வேட்டியை இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி வழங்கினார். தொடர்ந்து தி.மு.க., நிர்வாகிகள் முன்னிலையில் லோக்சபா தேர்தல் பணி குறித்து பேசினார். நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட தலைவர் கார்கண்ணன், அமைச்சர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் தென்னவன், தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், மாவட்ட அவைத்தலைவர் கணேசன், சிங்கம்புணரி முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைராசன், ஜெயங்கொண்டநிலை மணிமாறன், ராஜபாண்டியன், ரகு பாண்டியன், ரமேஷ் பாண்டியன், திருப்புவனம் மேற்குஒன்றிய செயலாளர் வசந்தி சேங்கைமாறன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் திருநாவுக்கரசு, சிவகங்கை மாவட்ட தி.மு.க., துணைச்செயலாளர் ஜோன்ஸ்ரூேஸா, நடிகர் நிஷாந்த் ரூசோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News