நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி நடவடிக்கையில் வித்தியாசத்தை உணர்ந்த தாயார் அவரிடம் விசாரித்தார். அப்போது அவர் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதை அடுத்து அவரை பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில் மாணவி 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுவன் மாணவியை காதலித்து கர்ப்பம் ஆக்கியது தெரிய வந்தது. இதை அடுத்து சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.