புதுகை மக்கள் நீதிமன்றத்தில் 1602 வழக்குகள் தீர்வு

புதுகை மக்கள் நீதிமன்றத்தில் 1602 வழக்குகள் தீர்வு காணப்பட்டது.

Update: 2024-06-09 14:49 GMT

வழக்குகளுக்கு தீர்வு 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 இடங்களில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், மொத்தம் 1,602 வழக்குகளுக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டு, முடித்து வைக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பில் சனிக்கிழமை தேசிய மக்கள் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் 8 அமர்வுகளாகவும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள நீதிமன்றங்களில் 12 அமர்வுகளாகவும் என மொத்தம் 20 அமர்வுகளில் நடைபெற்றன.

மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜி. சுபத்ராதேவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்ட குடும்பநல நீதிபதி எஸ். ஜெயந்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஜி.எம். வசந்தி, அத்தியாவசியப் பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிபதி ஏ.கே. பாபுலால், முதன்மை குற்றவியல் நடுவர் எஸ், சசிகுமார்,

மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பூர்ணிமா, குற்றவியல் நடுவர் - 1 என். விஸ்வநாதன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 2 4,773 வழக்குகள் பட்டியலிடப்பட்டன. இவற்றில் 1,602 வழக்குகளுக்கு சுமுகத் தீர்வுமாவட்டம் முழுவதும் மொத்தம் 4,773 வழக்குகள் பட்டியலிடப்பட்டன.

இவற்றில் 1,602 வழக்குகளுக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டது. மொத்தம் ரூ. 4.03 கோடி மதிப்பில் தீர்வும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலரும், சார்பு நீதிபதியுமான இ. ராஜேந்திரகண்ணன் செய்திருந்தார்.

அறந்தாங்கியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு ஓய்வுபெற்ற மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். பாலராஜமாணிக்கம் தலைமை வகித்தார். சார்பு நீதிபதி ஏ. உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தார். வராக்கடன் உள்ளிட்ட245 வழக்குகளில் 12 வழக்குகள் ரூ. 10.12 லட்சத்துக்கு பேசி முடிக்கப்பட்டது.

Tags:    

Similar News