நாகர்கோவிலில்  கஞ்சா விற்ற  2 பேர் கைது

நாகர்கோவிலில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி சென்ற இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-24 03:22 GMT
கைதான வாலிபர்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையம் அருகில் கோட்டார் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருளப்பபுரம் ஸ்ரீ கிருஷ்ணா சாலை பகுதியை சேர்ந்த முகம்மது இம்ரான் (20), வேதநகர்  புதிய காலனி பகுதியை சேர்ந்த இப்னு நிஹால் (24) ஆகியோர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.  உடனே போலீசார் அவர்களை பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில் இரண்டரை கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை விற்பனைக்காக எடுத்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் ரெண்டு பேரையும் கோட்டார் போலீசார் கைது செய்து  கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம், ரூபாய் 1200 ஆகியவற்றை பறிமுதல் செய்து பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த கஞ்சாவை தேனி மாவட்டத்திலிருந்து வாங்கி வந்ததாக போலீஸிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News