சேலம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

Update: 2023-12-07 08:06 GMT

கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முனியப்பம்பாளையம் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி ஏற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தியதாக ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த உதயகுமார் ( 58), பாலு (49) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பொதுமக்களிடம் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 650 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News