ஆரணி அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்
ஆரணி அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-26 13:42 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுனை சேர்ந்தவர் மகேஷ்பாபு. இவருக்கு பெட்ரோல் பங்க் உள்ளது.மகேஷ்பாபு பெட்ரோல் பங்க்கில் வசூலான ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்து 670-ஐ எடுத்துக்கொண்டு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பறக்கும் படையினர் காரை சோதனை செய்து பணத்திற்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.சிறிது நேரத்தில் பெட்ரோல் பங்க்கில் இருந்து பணத்துக்கான ஆவணங்களை எடுத்து வந்து மகேஷ்பாபு காண்பித்தார்.
ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்று பணத்தை பெற்றுச் செல்லுங்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.