சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-26 15:49 GMT
சிவகாசி அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது....

விருதுநகர் மாவட்டம், சிவகாசி- விருதுநகர் ரோட்டில் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அங்குள்ள ஒரு பள்ளியின் பின்புறம் சிலர் சந்தேகம் அடையும் வகையில் நின்று கொண்டிருந்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது அவர்கள் இருவரும் திருத்தங்கல் பாண்டியன்நகரை சேர்ந்த கருப்பையா மகன் மாரீஸ்வரன் (40), பார்த்தீபன் (51) என தெரியவந்தது.

இவரும் 50 கிராம் கஞ்சாவை விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News