வெள்ளகோவிலில் மது விற்ற  2 பேர்  கைது !

வெள்ளகோவில் பகுதிகளில் மது விற்ற இரண்டு நபர்களை சிலுவையில் காவல்துறையினர் கைது செய்தனர் அவரிடம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-06-11 11:50 GMT

கைது

வெள்ளகோவில் பகுதியில் மது பாட்டில்களைபதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி வெள்ளகோவில் போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிமுத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வெள்ளகோவில் - காங்கயம் சாலை டாஸ்மாக் கடைஅருகில் மது விற்றுக் கொண்டிருந்த கோவை கணபதி எம்.கே.பி. நகரை சேர்ந்த இளையராஜா (வயது 36) என்வரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல் முத்தூர்காங்கயம்சாலை டாஸ்மாக் கடை அருகில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த மாதவராஜபுரத்தை சேர்ந்த முருகேசன் (52) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News