அவிநாசியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது

அவிநாசியில் புகையிலை பொருட்கள் விற்ற இரண்டு பேரை அவிநாசி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-17 14:33 GMT

காவல் நிலையம்

திருப்பூர் மாவட்டம்,அவிநாசியில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது! அவிநாசி இந்திரா காலனியை சேர்ந்த சபரி முத்து மகன் அமல்ராஜ் (வயது 45) மற்றும் பள்ளிவாசல் வீதியை சேர்ந்த லக்மன் (வயது58)இருவரும் பள்ளிவாசல் வீதியில் தடை செய்யப்பட்ட புகையிழைப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவிநாசி போலீசார் அவர்கள் இருவரும் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 12 பாக்கெட் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News