லாரி நேருக்கு நேர் மோதி விபத்து 2 பேர் பலி !
புளியங்குடியில் கனரக லாரியும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.
Update: 2024-03-19 10:25 GMT
தென்காசி மாவட்டம் மதுரை செல்லும் சாலையில் புளியங்குடி அரசு போக்குவரத்து பணிமனை அருகே கேரளாவிற்கு பனையூரில் இருந்து எம்சென்ட் ஏற்றிச் சென்ற கனரக லாரியும் தென்காசியில் இருந்து ராஜபாளைம் சென்ற மினி டிப்பர் லாரியும் நேர்க்கு நேர் மோதி விபத்து சம்பவ இடத்தில் டிப்பர் லாரி ஓட்டுனர் முத்துக்குமார்(31) அவருடன் வந்த கணேஷ்குமார்(43) ஆகிய இருவரும் உயிரழப்பு இச்சம்பவம் பற்றி தகவலறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்க்கு வந்து பலியான இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனை புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கனரக லாரி ஓட்டுனர் சதீஷ்(31) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.